×

காவேரிப்பாக்கத்தில் பரபரப்பு ஏடிஎம் கார்டுடன் முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு: கொலை செய்து வீசப்பட்டவர் யார்? போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:  காவேரிப்பாக்கத்தில் முட்புதரில் ஏடிஎம் கார்டு மற்றும் செருப்புடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இது போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் மேய்ச்சலுக்கு விட்டிருந்த பன்றியை தேடி முட்புதர் பகுதி வழியாக நேற்று சென்றனர். அப்போது முட்புதரில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தகவல்அறிந்த இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பார்த்தீபன் மற்றும் போலீசார் வந்து எலும்புகள் மற்றும் மண்டை  ஓடு ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.             

மேலும் எலும்புக் கூடு அருகே இருந்த ஆண்களுக்கான செருப்பு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். எனவே கொலை செய்யப்பட்டவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது. வேறு எங்காவது கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்களா? அல்லது அங்கேயே கொலை நடந்ததா? கொலையானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.இதுகுறித்து விஏஓ நவீன் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அதில் ஏதாவது அங்க அடையாளம் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அதேபோல் ஏடிஎம் கார்டு வைத்தும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.



Tags : Kaveripakkam ,Mudbudhra , Human skeletal , Mudbudhra,killed?,investigating
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...