×

இருளர், நறிகுறவர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: திமுக எம்எல்ஏ, எம்பி வழங்கினர்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 1156 இருளர் மற்றும் நறிகுறவ குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் பொருட்களை, திமுக எம்எல்ஏ, எம்பி ஆகியோர் வழங்கினர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 144 தடை அமலில் உள்ளது. இதையொட்டி உத்திரமேரூர் அடுத்த பெருநகர், உள்ளம்பாக்கம், நாஞ்சிபுரம், வினோபாநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் குடும்பங்கள், மானாம்பதி, வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நறிகுறவர்கள் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் 1156 இருளர் மற்றும் நறிகுறவர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினர்.

அதில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், முக கவசம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இருந்தன. அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதேப் போல் உத்திரமேரூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள், முககவசம், சானிடைசர் உள்பட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் லதா, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, இலக்கிய அணி கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அணி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MB ,Victim Families ,DMK MLA , Relief Subsidy, Illegary , Victim Families, DMK MLA, MB Provided
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு