×

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலி

தாராபுரம்:  தாராபுரம் அருகே தோட்டத்தில் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் 16 ஆடுகள் பலியாகின. தாராபுரம் திருப்பூர் சாலை கோனாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 20 செம்மறி ஆடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு அங்குள்ள தனது வீட்டில் இரவு தூங்கச் சென்றார்.நேற்று காலை வந்து பார்த்த முத்துலட்சுமி 16 ஆடுகள் வெறி நாய்களால் கடித்து கொல்லப்பட்டு பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய்கள் பட்டிக்குள்ளே சென்று 16 ஆடுகளை கடித்துக்கொன்று ரத்தம் குடித்து விட்டு சென்றதும் அதற்கான தடயங்களும் இருந்தது தெரிந்தது. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவயிடம் வந்து விசாரித்தனர்.

   இதேபோல் கடந்த 4ம் தேதி கவுண்டச்சி புதூரில் முருகேசன் என்பவர் தோட்டத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலியானது குறிப்பிடத்தக்கது.   கணவரை இழந்த முத்துலட்சுமியின் ஒரே வாழ்வாதாரமான ஆடுகளை வெறி நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் கோனபுரம் கிராமப் பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மர்ம விலங்கு மற்றும் வெறி நாய்கள் வளர்ப்பு ஆடுகளையும், மாடுகளையும் தாக்கி கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து தாக்கும் வெறிநாய்கள் மற்றும் மர்ம விலங்கு கூட்டத்தை உள்ளாட்சித்துறையுடன் வனத்துறையினரும் இணைந்து கூண்டு வைத்துப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், என்றார்.


Tags : Tarapuram Near Tarapuram , Tarapuram,rabies, killed
× RELATED ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல்...