×

தமிழகத்தில் வவ்வால்கள் தொண்டையில் கொரோனா: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவல் குறித்து 7 மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகம் உள்பட 4 மாநில வவ்வால்களில் கொரோனா தொற்று இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே, நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக வவ்வால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்றும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ கொரோனாவை பரப்பி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, ஏழு மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு வகையான வவ்வால்களின் தொண்டையில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற 4 மாநிலங்களின் வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வவ்வால்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை  என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Medical Research Council ,Tamil Nadu , Tamil, Bats, Corona, Medical Research Council
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...