×

அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் சமாளிக்க முடியாமல் ம.பி முதல்வர் திணறல்: அருண்ஷோரி டிவீட்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து முதல்வராக பாஜ.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதுவரை எந்த துறைக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.  இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியப் பிரதேசத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் முதல்வரான காங்கிரசை சேர்ந்த கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், பாஜ.வின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ம.பி.யில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் 45 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றை தடுக்கவேண்டிய நிலையில் உள்ள சுகாதாரத்துறை உள்பட எந்த துறைக்கும் இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கொரோனாவை தடுப்பது உள்பட முக்கிய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.


Tags : MPs ,ministers ,Arunshori ,MP Chief Ministers ,The Cope of Shortness , Ministers, Madhya Pradesh Chief Minister, Arunshori
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...