×

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா?: வரிகள் ஆணையம் வேண்டுகோள்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி சலுகையை பெற விரும்புவோர், இதுகுறித்து தங்களது நிறுவனத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை. நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலும் உச்சவரம்பு மாறவில்லை. ஆனால், புதிய வரி விகிதங்கள் அறிவித்து, பழைய மற்றும் புதிய வரி விகிதத்தில் எதை தேர்வு செய்வது என்ற முடிவை, வரி செலுத்துவோர் விருப்பத்துக்கே அரசு விட்டுவிட்டது. அதாவது, வரி செலுத்துவோர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்ட முதலீடுகள், வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை கோருவதை விட்டுக்கொடுத்தால் மட்டுமே புதிய வரி விகிதம் அவர்களுக்கு பொருந்தும்.

 ஆண்டுக்கு 2.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை. புதிய வரி விகிதப்படி, 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி, ஆனால், 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பழைய வரி விகிதப்படி 20 சதவீதமும், புதிய வரியின்படி 10 சதவீதமும் செலுத்த வேண்டும். சில வகைகளில் பழைய வரி பிரிவுகளே லாபகரமானதாக இருக்கும் என, தெரிய வந்துள்ளது.  இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கு புதிய வரி விகிதத்தை ஊழியர்கள் ஏற்க விரும்பினால் அது பற்றி தங்கள் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கேற்ப நிறுவனம் அந்த ஊழியரின் வருவாயை கணக்கிட்டு, வருமான வரிப்பிரிவு பிஏசி விதிகளின்படி டிடிஎஸ் பிடித்தம் செய்யலாம்.

ஊழியர்கள் எதுவும் தெரிவிக்காவிட்டால், மேற்கண்ட வரி பிரிவை கருத்தில் கொள்ளாமல் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஊழியர்கள்  புதிய அல்லது பழைய வருமான வரி பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப டிடிஎஸ் கணக்கிட்டு சரி செய்யப்படும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.


Tags : Federal Budget, New Income Tax and Tax Commission
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...