×

ராதாபுரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர் கைது

நெல்லை: ராதாபுரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வீடுவீடாக மக்களிடம் ஜெகதீஸ் விநியோகித்துள்ளார். நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த திசையன்விளையில் உள்ள திருமண மண்டபத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கியதாக ஜெகதீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Radhapuram, relief goods, supplier arrested
× RELATED குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு