காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் 5 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மீனாட்சிபுரம் மஹபூப் பாளையம் பள்ளிவாசல் தெரு பகுதியை காரைக்குடி நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி லாக் செய்யப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறுமியின் தந்தை டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என கடந்த 14 நாட்கள் அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்ட நிலையில் இருந்த அவர் தனிமை காலம் முடிந்து நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 10 வயதிற்கு உட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.