கோவை: கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனையில் கொரோனா பாதித்த மருத்துவர்கள் தங்கியிருந்த இடத்தை தனிமைப்படுத்தவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மருத்துவர்கள் தங்கி இருந்த அறை, உணவகத்தையே மீண்டும் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு செய்து தருவதில் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாக மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.