மூணாறு: மூணாறில் ஊரடங்கு உத்தரவால், சாலைகளில் போக்குவரத்து இல்லாததால், காட்டுயானைகள் ஜாலியாக உலா வருகின்றன.கேரள மாநிலம், மூணாறில் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சாலைகளில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதனால், காட்டுயானைகள், மாடுகள், பன்றிகள் முக்கிய சாலைகளில் சுதந்திரமாக உலா வருகின்றன. நேற்று முன்தினம் மாலை மூணாறில் இருந்து சொக்கநாடு எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள ஹைரேஞ் கிளப் பகுதியில் 2 குட்டி யானைகள் உள்பட 4 யானைகள் சாலையில் உலா வந்தன. இதனால், பொதுமக்கள் பீதியில் உளளனர்.