மும்பை: மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.