×

முதியோர் ஓய்வூதியம் பெற முண்டியடித்து நின்ற பொதுமக்கள்

திருப்போரூர்: திருப்போரூர் இந்தியன் வங்கியில், முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக, பொதுமக்கள், முண்டியடித்து நின்றனர். திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இந்தியன் வங்கி செயல்படுகிறது. இங்கு திருப்போரூர், தண்டலம், இள்ளலூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், ஆலத்தூர், மடையத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். மேலும் ஏராளமான ஓய்வூதியதாரர்கள், மகாத்மா காந்தி வேலை திட்ட பயனாளிகள் ஆகியோரும் கணக்கு வைத்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி புனித வெள்ளியை தொடர்ந்து 3 நாட்களாக வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி, ஏராளமான கிராம மக்கள் பணம் எடுப்பதற்காக வங்கி முன்பு காலையிலேயே குவிந்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர், சமூக இடைவெளியுடன் நிற்கும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து,  அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டு, வரிசைப்படி பொதுமக்களுக்கு பணம் வழங்கப்பட்டது.  இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : civilians ,retirement , civilians, preoccupied , retirement , elderly
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை