×

உணவு வழங்க தடை விதித்தது மனிதநேயமற்ற செயல்: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல். கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல்கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன.

இந்த நேரத்தில் கூட்டம் சேருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைத் தான் செயல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியரகங்களில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்றால், அந்தப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேராது என்பதை உணர வேண்டும். சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் இது நடைமுறை சாத்தியம் இல்லாதது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : TTV Dinakaran , Curfew, ban on food, inhumanity, TTV Dinakaran
× RELATED பிரசாரத்துக்கு அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை