×

கோவையில் முக கவசம் இன்றி சுற்றினால் கைது கலெக்டர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: கொரோனா அறிகுறி இருந்தும் பரிசோதனை செய்யாமலும், சிகிச்சை எடுக்காமலும் உள்ள நபர்களின் மீது தொற்றுநோய் தடுப்புச்சட்டம் 1897 மற்றும் பொது சுகாதார சட்டம் 1939ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், வெளியே செல்ல அனுமதி இல்லை. இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும்.   அவசிய தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுதல் மற்றும் முக கவசம் அணியாமல் அலட்சியம் செய்யும் நபர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Tags : Arrest Collector , imbatore, face shield, arrest, collector
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...