×

அம்பேத்கரின் படத்திற்கு வீட்டில் அஞ்சலி செலுத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைவரும் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அவரவர் வீட்டில் இருந்தபடியே அஞ்சலி செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  சமத்துவ உரிமையைச் சிதைக்கும் முயற்சிகளை முறியடித்து அதனை பாதுகாக்கவும், பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வைத் தகர்த்து இங்கே  சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று (ஏப்.14) யாவரும் உறுதியேற்போம்.

 தற்போதைய சூழலில், கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் தேசம் தழுவிய ஊரடங்கு நடைமுறையிலிருப்பதால் அவரவர் இல்லங்களில் இருந்தவாறே அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி சமத்துவநாள் உறுதிமொழியை ஏற்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.


Tags : Ambedkar ,Thirumavalavan , Ambedkar, tribute, Thirumavalvan
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....