×

துப்பரவு ஊழியர்கள் வராததால் வீடுகளில் கிருமி நாசினி தெளித்த நடிகை ரோஜா

சென்னை: நகரி தொகுதியில் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார் நடிகை ரோஜா. ஆந்திராவில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார் ரோஜா. கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியபோது, குடும்பத்துடன் வீட்டில் யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்தார் ரோஜா. இந்நிலையில் இவரது நகரி தொகுதியில் உள்ள வடமாலை என்ற பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதையடுத்து இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் அந்த பகுதிக்கு செல்ல துப்பரவு ஊழியர்கள் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த ரோஜா, மாஸ்க், தடுப்பு உடை அணிந்து தானே கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்தார். அதன்படி அவர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளித்தார். இதையடுத்து ஊழியர்களும் பணிக்கு வந்தனர்.


Tags : Actress ,Rose Spraying Disinfectant Home , Cleaning staff, antiseptic, actress rose
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...