×

அமெரிக்காவில் சூறாவளி கனமழைக்கு 6 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு 21 ஆயிரம் ேபர் பலியாகியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது சூறாவளியும் வீசிவருகிறது. தென் அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணத்தில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தொடங்கி சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் மழை காரணமாக வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தென்பகுதியில் சூறாவளி தாக்குதலுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : US 6 ,hurricane season , America, Heavy Rain, 6 killed
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது