×

அம்பேத்கர் பிறந்ததினத்தையொட்டி வாழ்த்து வலிமையான, செழிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும்: பொதுமக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

புதுடெல்லி: சட்டமாமேதை அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி வலிமையான, செழுமையான நாட்டை உருவாக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் சட்டமாமேதையுமான அம்பேத்கரின் 129வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொதுமக்களுக்கு விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், சட்டநிபுணர், பொருளாதார நிபுணர், அரசில்வாதி என்ற பல்வேறு வகையில் அம்பேத்கர் இந்தியாவையும், சமூகத்தையும் பலனடைய செய்தார்.

சமூக நல்லிணக்கம், சமத்துவம் கொண்ட சமூகத்தை அவர் கற்பனை செய்திருந்தார். இதற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் உருவாக்கிய சட்டங்கள் பல ஆண்டுகளகக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.  அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது கொள்கைகள், போராட்டங்களை ஊக்கமாக கொண்டு வலிமையான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்க இந்திய மக்கள் முன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Birthday ,Ambedkar ,President ,India ,Prosperous India ,Calls On The Public , Ambedkar Birthday, Indian, Public, President
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா