சென்னை: தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.