×

அகமதாபாத்தில் அதிரடி: முகக்கவசம் அணியாவிட்டால் 5,000 அபராதம், 3 ஆண்டு சிறை

அகமதாபாத்: அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 5,000 அபராதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனை வரையில் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் நோய் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இன்று காலை 6 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்றும், அணியாதவர்களுக்கு 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். இதை கட்டத் தவறுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Tags : Ahmedabad ,jail , Ahmedabad, face-to-face, 3 years imprisonment
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி