×

ரத்ததானம் செய்தார் ஜெஜே

இந்திய கால்பந்து அணி நட்சத்திர வீரர் ஜெஜே லால்பெகுலா (29 வயது). ஊரடங்கு அமலில் உள்ளதால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மனித நேயத்துடன் ரத்த தானம் செய்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இது குறித்து ஜெஜே கூறியதாவது: மிஸோரம் சைனாட் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என்ற தகவல் யங் மிஸோ சங்கம் மூலமாக எனக்கு கிடைத்தது. இது போன்ற சமயங்களில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்தேன்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது. என்னால் இயன்ற சிறு உதவியை செய்திருக்கிறேன். மிகவும் திருப்தியாக உள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். இவ்வாறு ஜெஜே கூறியுள்ளார்.


Tags : JJ ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி