புதுடெல்லி: டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. கிழக்கு டெல்லியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரத்துக்கு பின்னரே அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிலநடுக்கம் டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள நொய்டா, குர்கான், காசியாபாத், பரீதாபாத் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.