×

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் கொட்டிய பாமாயிலை அகற்றும் பணி தீவிரம்

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு சுமார் 20,000 லிட்டர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இன்று மதியம் 2.30 மணி அளவில் புறப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கீழே கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியில் இருந்த பாமாயில் சாலையில் ஓடியது. மேலும் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த ஓட்டுனரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையில் உள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் கொட்டிய பாமாயிலை தண்ணீர் பீய்ச்சி அகற்றி வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : collapse ,Anna Bridge ,Chennai ,Anna flyover ,oil tanker lorry accident , PANAIL Tanker Lorry, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...