×

வீரவநல்லூரில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்த பொதுமக்கள்

வீரவநல்லூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் பரவலைத் தடுக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படியும் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படியும் பேரூராட்சி செயல்அலுவலர் பெத்ராஜ், சுகாதார ஆய்வாளர் பிரபாகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் முனியாண்டி, சுடலைமணி ஆகியோர் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் வீரவநல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தும், கழிவுகளை அகற்றியும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி வீரவநல்லூர் 8வது வார்டு சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்தும் அரிசி, மளிகைப் பொருள்கள், உதவித்தொகை வழங்கி கவுரவித்தனர். தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு பொருட்கள் அளித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு செய்த பொதுமக்களை செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.




Tags : public ,purity workers ,Veeravanallur , purity, workers ,Veeravanallur, Respecting, civilians
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...