சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் முறையை வெளியிடப்பட்டுள்ளது. உடல்களை எப்படி கையாளுவது குறித்த முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி, பை மீது கிருமி நாசம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறைகளை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.