சென்னை: வணிக ரீதியான மின் இணைப்புகளுக்கு உரிய சலுகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என அமமுக பொதுaச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம். ஆனால், 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும். எனவே, வணிக ரீதியான மின் இணைப்புகளுக்கு மின்கட்டண தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.