டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பது என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பது என்று பிரதமர் எடுத்துள்ள முடிவு மிகச்சரியானது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்க பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார்.