×

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி, ஃபீனிக்ஸ் மால் ஊழியர் உட்பட 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!!..

சென்னை :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் சென்னை ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என சென்னையில்தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா சென்னை அதிக அளவில் பாதிக்கப்பட்டாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சிலர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி, 54 வயதுப் பெண், 25 வயது ஆண் சிகிச்சையில் குணமடைந்தனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அவர்கள் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.குடும்பத்தில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை முடிந்து அவர்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரி சோதனையிலும் உடல் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் இன்று காலையில் 3 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மருத்துவர்கள் வாழ்த்து கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.ஏற்கனவே 72 வயது மூதாட்டி சிகிச்சையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 50 வயதைக் கடந்தவர்கள். வயதானவர்களை கொரோனா பாதித்தால், அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறிவந்த நிலையில் இருவரும் சிகிச்சையில் குணமடைந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதே போன்று சென்னை ஃபீனிக்ஸ் மாலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் குணமடைந்துள்ளார்.திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஆனந்தன் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனாவில் இருந்து  குணமடைந்த ஆனந்தனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.குணமடைந்த இளைஞர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் ஆட்சியர் கந்தசாமி தகவல் அளித்துள்ளார்.

Tags : granddaughter ,Chennai Coronation ,Phoenix Mall , 84-year-old grandmother of Chennai, Corona, property, house, Phoenix, mall, employee
× RELATED காசிப்பூரில் விவசாயிகள்...