×

சுகாதார பணியாளர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் : ராகுல் காந்தி புகழாரம்

டெல்லி : சுகாதார பணியாளர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் எனவும் அவர்கள் உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் எனவும் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸை விட அது தொடர்பான அச்சமும் தவறான தகவல்களும் தான் பெரிய ஆபத்தாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். தேசபக்தி என்பது தேவையான காலத்தில் நாட்டுக்கு சேவை செய்வது ஆகும் என்றும் சமூக சுகாதார பணியாளர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் ஆவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தியாகங்களுக்குகாக அவர்களுக்கும் அவர்களுடன் குடும்பத்தினருக்கும் நாம் மிகவும் நன்றிக்கடன்ப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். அவர்கள் விளம்பரம் வெளிச்சம் இல்லாமல் இந்த சிக்கலான நேரத்தில் நம்மை பாதுகாக்க தொய்வின்றி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு ஆற்றி வரும் சேவைக்காக ஒவ்வொரு சுகாதார பணியாளரையும் வணங்குகிறேன் என்றும் கொரோனா வைரஸில் இருந்து அவர்களும் அவர்களுடன் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்று பிரார்த்திக்கிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.

Tags : Health workers ,Rahul Gandhi , Health workers, Patriots, Rahul Gandhi, Praise
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...