×

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் இரும்பு கம்பியால் தாக்கி கணவன் மண்டை உடைப்பு: மனைவியிடம் போலீசார் விசாரணை

சென்னை: கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், இரும்பு கம்பியால் தனது கணவன் மண்டையை உடைத்தார். அந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருவல்லிக்கேணி தர்கா மெயின் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (30), கேட்டரிங் வேலை செய்து வரும் இவருக்கு மேரி (28) என்ற மனைவியும், 2  பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேரி வேளச்சேரியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது, அங்கு வேலை செய்யும் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் பல இடங்களில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சாமுவேல், இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின்படி ராயப்ேபட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேரி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், தனது மனைவியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த மேரி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து, கணவன் சாமுவேல் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சாமுவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சாமுவேலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய சாமுவேல், ராயப்ேபட்டை காவல் நிலையத்தில் மனைவி மேரி மீது புகார் அளித்தார். போலீசார் மேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Husband's ,skull fractured , being hit, iron rod
× RELATED அந்தியூர் அருகே ரூ.9.23 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது