×

கடைகளை உடைத்து பணம் மளிகைபொருள் கொள்ளை

திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர் - பெரியபாளையம் சாலை, பாலாஜி நகரை சேர்ந்தவர் வினோத் (39). திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் சி.டி.எச் சாலையில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வினோத் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை இவரது கடையின் இரும்பு ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வினோத்துக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

பின்னர், அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை சோதனை செய்தார். அப்போது கடையில் வைத்திருந்த ₹30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும், இவரது கடைக்கு பக்கத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த சத்தியசீலன் (45). என்பவரது கடையின் இரும்பு ஷட்டரும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ₹6 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகைப் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Tags : Money ,Grocery Store, Robbery
× RELATED செங்கல்பட்டு அருகே நள்ளிரவில்...