×

சுகாதார பணியாளர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள்: ராகுல் காந்தி புகழாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வௌியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்த ஆபத்தான சூழ்நிலையில் அச்சமும், தவறான தகவல்களும்தான் கொரோன வைரசை விட அபாயம் நிறைந்தவை. கொரோனா ஆபத்துகளையும், சுகாதாரமாக இருப்பதன் அவசியத்தையும் பற்றி ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம மருத்துவச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மிகுந்த துணிவுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுக்கு சேவை செய்வதுதான் உண்மையான தேசபக்தி. வெளி உலகத்தால் அறியப்படாதவர்கள் இந்த ஹீரோக்கள். இந்த சமூக, சுகாதார பணியாளர்களின் தியாகத்துக்காக, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் நாம் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  நாட்டுக்கு சேவை புரியும் இந்த ஒவ்வொரு சமூக பணியாளரையும் நான் வணங்குகிறேன். அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இந்த தொற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாப்போடு இருக்க பிரார்த்திக்கிறேன்,’ என நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : Health workers ,Rahul Gandhi , Health workers, patriots, Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...