×

டிடிவி.தினகரன் வலியுறுத்தல் : விவசாய பொருட்களை அரசுகொள்முதல் செய்ய வேண்டும்

சென்னை: விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் விளைவித்த உளுந்து, பயிறு உள்ளிட்ட தானியங்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். மலைப்பிரதேசங்களில் உள்ள காய்கறி விவசாயிகளின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. இந்நிலை தொடராமல் தடுக்க காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை தமிழக அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும் என  உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  எனவே,  மாவட்ட வாரியாக விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான பணியை ஒருங்கிணைக்க  நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளோடு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

இப்போது பிஸ்கட், பிரட் போன்ற பொருட்களுக்கு  கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாதவாறு முன்கூட்டியே அந்தப் பொருட்களை உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : DDV.Dinakaran ,Government ,TTV Dinakaran , TTV Dinakaran,Government,corona
× RELATED நான் தேனியில் போட்டியிட வேண்டும்...