×

தாமிரபரணியை காப்போம் ஓவியப்போட்டி

நெல்லை:  நெல்லை முத்தமிழ் பப்ளிக் பள்ளி மற்றும் நெல்லை பை சைக்கிள் சார்பில், தாமிரபரணியை காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. அனைத்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் யு6, யு10, யு15 மற்றும் ஓபன் ஆகிய பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே ஓவியங்களை வரைந்து அனுப்பி வைத்தனர்.

இதில் யு6 பிரிவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். யு10 பிரிவில் முதல் பரிசை விஜயசிங்கன், 2ம் பரிசை இந்திரேஸ், 3ம் பரிசை கிரிதரணிசாய் தட்டிச் சென்றனர். யு15 பிரிவில் முறையே டேவிட் ரெஜி லிஜோ ராஜ், ஹாசினி சக்தி பாலா, கவுசல்யா ஆகியோரும், ஓபன் பிரிவில் முறையே செல்வ ஸ்வீட்டி, மதனா, சுரேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை முத்தமிழ் பப்ளிக் பள்ளி தாளாளர் அமரவேல் பாபு, நெல்லை பை சைக்கிள் நிறுவனர் அருள் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் ஹரிபிரதான் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Copper Sketch Contest , Copy, Copper, Sketch ,Contest
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...