காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதற்கிடையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள் ஊரடங்கு காலத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் 510 பேருக்கு ₹25 லட்சம் மதிப்பில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 7 பொருட்களை எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் வழங்கினார். அவருடன் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மகேந்திரன், நகர திமுக செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.