×

கொரோனா பரப்பியதாக தாய்லாந்து நாட்டினர் 6 பேர் கைது

ஈரோடு: தாய்லாந்து நாட்டில் இருந்து 6 பேர் கடந்த மாதம் 11ம் தேதி சுற்றுலா விசாவில் ஈரோடு கொல்லம்பாளையம் வந்தனர். இவர்கள் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில், 3  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதும் நோய் தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தது, பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெறும் 6 ேபரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.  பின்னர், ஈரோடு ஜேஎம்-3 மாஜிஸ்திரேட் சரண்யா, வீடியோ கான்பரன்சில் விசாரணை நடத்தி, 23ம் தேதி வரை காவலில் வைக்கவும், கொரோனா வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதியும் வழங்கினார்.


Tags : nationals ,Thai ,arrest , 6 people arrested, Corona, Thailand
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...