சென்னை: அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சரக்கு விமானம் மூலம் கொரியர் பார்சல்களில் மருத்துவ உபகரணங்கள் வந்தன.சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள வெளிநாட்டு தபால்களுக்கான அஞ்சலக அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல்களை உடனடியாக கிளீயர் செய்து டெலிவரி கொடுத்தனர்.அவற்றில், 39 பார்சல்களில் வென்டிலேட்டர்கள், N95 மாஸ்க்குகள், ECG மிஷின்களும், 78 பார்சல்களில் டிஜிட்டல் தெர்மா மீட்டர்கள், மாஸ்குகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் வந்திருந்ததாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.