×

கொரோனா வைரஸ் சிகிச்சை நெறிமுறை வகுக்க 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதேபோன்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், சென்னை மருத்துவ கல்லூரியில் ஓய்வு பெற்ற மருந்து துறை இயக்குநர் ராஜேந்திரன்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி பேராசிரியர்  தர், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பரந்தாமன், துணை பேராசிரியர் சந்திரசேகர், தொராசிக் மருத்துவ மையத்தின் முன்னாள் இயக்குநர்கள் மகாலிங்கம், ரங்கநாதன், சென்னை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த ராமசுப்ரமணியன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன், வேலூர் சிஎம்சி துறைத் தலைவர் ஆப்ரஹாம் மாத்யூஸ், மருத்துவர் ஆனந்த் ஜகாரியா, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் ஹரிஹரன், விழுப்புரம் மருத்துவ கல்லூரியின் மருந்து துறைத் தலைவர் சிவக்குமார், செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருந்து துறை தலைவர் நர்மதா லட்சுமி, சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராமராஜகோபால், பாபு ஆப்ரஹாம், ராமகோபால் கிஷன் சென்னை விஜயா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் என்.பாபு, மருத்துவர் கிருஷ்ணராஜசேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு வழிமுறைகள், சிகிச்சை வழிமுறைகளை, கொரோனா வைரஸ் தொடர்பான சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.


Tags : Expert Panel ,Doctors ,Tamil Nadu , Coronavirus, 19 Doctors, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...