×

திருவள்ளூரில் நெடுஞ்சாலையில் கொரோனா: படம் வரைந்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாமல் பலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர். அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யும் போலீசார், வழக்கு பதிவும் செய்கின்றனர். வாகனத்தில் காற்றை பிடுங்கி நூதன தண்டனை வழங்குகின்றனர்.

தற்போது வைரஸ் பயங்கரம் குறித்த விழிப்புணர்வுக்காக நெடுஞ்சாலையில் படம் வரைந்து வருகின்றனர். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன ஓட்டிகள் கண்ணில் படும்படியாக பெரிய அளவில் கொரோனா வைரஸ் படத்துடன், ‘தனித்திருப்போம், விழித்திருப்போம், வீட்டில் இருப்போம், கொரோனாவை விரட்டுவோம்’ என திருவள்ளூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் தலைமையில் மாவட்ட ஓவியர்கள் சங்கத்தினர் 2 மணி நேரத்தில் எழுதி வைத்துள்ளனர். இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Corona ,highway ,Thiruvallur ,Corona Image , Thiruvallur, Highway, Corona Image, Awareness
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு