×

சிகிச்சை தர திருமண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்கிறேன்: முதல்வருக்கு வைரமுத்து கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு தங்கள் கட்சி அலுவலகத்தை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வந்தால் அளிக்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தனர். இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் சென்னையில் உள்ள தனது 3 வீடுகளை அளிக்க தயார் என்று சொன்னார். இதை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : CM ,treatment hall ,government ,Diamond , Marriage Hall, CM, Corona Virus, Diamonds, Letter
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...