பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரின் கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து கிடந்துள்ளது.
இது குறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.