மும்பை: இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்ததால் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை கடந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,450 புள்ளிகள் உயர்ந்து 30,067 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 702 புள்ளிகள் உயர்ந்து 8,786 புள்ளிகளில் வர்த்தகமானது.