சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை ஓரிரு வாரங்கள் நீட்டிக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஊரடங்கை நீட்டிக்கும் முன் கொரோனா சிகிச்சை, மக்களின் வாழ்வாதார ஏற்பாடுகளில் சரியான திட்டமிடுதல் அவசியம். மேலும் ஊரடங்கள் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.