சென்னை: ஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும், வயதானவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.