×

கிருமிநாசினி சுரங்க அறை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு உபகரணங்களைக் கொண்டு கிருமி நாசினிகளை தெளிக்கப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள்  உள்ளிட்டோர் மீது உச்சி முதல் பாதம் வரை  கிருமிநாசினி தெளிக்கும் வகையில் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்க அறை போன்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த அறையின் உள்ளே நடந்து வரும் நபர்கள் மீது குளியல் அறையில் ஷவரில் குளிப்பது போல் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

Tags : Disinfectant mining room , Disinfectant mining room
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...