×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கொரோனா தடுப்புக்கு மேலும் ரூ.1 கோடி நிதி: டி.ஆர்.பாலு எம்பி வழங்கினார்

தாம்பரம்: திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு நேற்று மாலை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசை சந்தித்து, கொரோனா தடுப்பு மருத்துவ உபகாரணங்களுக்காக ₹1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது குறித்த கடிதத்தை வழங்கினார். உடன் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் இருந்தனர். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ₹1.15 கோடியும், தற்ேபாது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ₹1 கோடி வழங்கியுள்ளேன்’’ என்றார்.

Tags : constituency ,Sriperumbudur , More Rs 1 crore , coronation block ,Sriperumbudur constituency:
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...