×

சுகாதார பெண் ஊழியரிடம் தகராறு விடுதி உரிமையாளர் மீது வழக்கு

தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பூக்கடை பகுதியில் மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  நேற்று பூக்கடை குழந்தை தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பெண் ஊழியர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த விடுதியில் எத்தனை பேர் தங்கி உள்ளார்கள், எத்தனை பேர் வேலை செய்கிறார்கள், கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து கேட்டபோது, விடுதியின் உரிமையாளர் கணேஷ்பிரபு (35) என்பவர் முறையாக பதிலளிக்காமல், பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர்.

மேலும், பெண் ஊழியரை தரக்குறைவாக பேசி,  பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து பெண் ஊழியர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்படி  ஆய்வாளர் சித்தார்த் சங்கர் வழக்கு பதிவு செய்து பெண் ஊழியரிடம் தவறாக பேசிய  தங்கும் விடுதியின் உரிமையாளர் கணேஷ்பிரபு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Health worker ,employer , Health worker,sues employer ,pute
× RELATED சுகாதார பணியாளர் பயிற்சி முகாம்