ஈரோடு: ஈரோடு -கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. கனமழை காரணமாக முழு கொள்ளளவான 42 அடியை அணை எட்டியதை தொடர்ந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. அணை நிரம்பியதால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு உள்பட 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.