×

14 மாத குழந்தைக்கு கொரோனா

குஜராத்: குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தின் புறநகரில் உள்ள தாரேத் தொழிற்பேட்டையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் உபி.யை சேர்ந்த தம்பதியின் 14 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வேறு எங்கும் வெளியில் செல்லாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அக்குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா அறிகுறி இல்லாத நிலையிலும் அவர்கள் வசிக்கும் தொழிலாளர் காலனி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜாம்நகர் மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி இக்குழந்தை தான் என்று மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.

Tags : Corona ,baby , Corona , 14 month old baby
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…