×

கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டப்படும் கடுமைகளை தவிர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவமனையை அணுகும் ஒரு சுமூகமான சூழலை அரசு உருவாக்க வேண்டும். இந்த நிலையில், அதற்கு நேர் மாற்றமாக நடைபெறும் நிகழ்வுகள் காரணமாக  சில இடங்களில் மக்களின் அச்சம் காரணமாக பிரச்னைகள் உருவாகின்றன. தமிழக அரசும் சுகாதாரத்துறையும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா அச்சத்தில் உறைந்து போயிருக்கும் மக்களிடம் காட்டப்படும் கடுமைகளும்,  பலவந்தங்களுமே இத்தகைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகும்.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி அந்த நடவடிக்கையில் தொய்வை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து,  தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளின் போது அப்பகுதி சமூக குழுக்கள் மூலமாக சுமூகமாக நடவடிக்கைகளை தொடர வேண்டும்.



Tags : Coroner ,victims , Corona, Government of Tamil Nadu
× RELATED ஆழ்வார்பேட்டையில் கட்டிடம் இடித்து 3...